428. சுகுணா விலாசம் (அ) சிவப்புச் சாயம் வெளுத்த நரிகள் - BY கி அ அ அனானி
ரொம்ப நாட்களுக்குப் பின் திடீரென்று கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. பதிவொன்றுக்கு எதிர்வினையாக அமைந்துள்ள கி.அ.அ.அ வின் மேட்டரை பதிவு செய்வது அவசியமென்பதால், அவர் எழுதி அனுப்பியதை (முதல் தடவையாக) எடிட் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.
இதை பதிப்பிக்கக் காரணம் .... கருத்துச் சுதந்திரம் தான் ! கி.அ.அ.அ பதிவுகளுக்கு விதவிதமாக டிஸ்கி எழுதி எழுதி அலுத்து விட்டதால், இதற்கு NO Disclaimer! அது போலவே, இப்பிரச்சினையில் எனது தனிப்பட்ட கருத்தை முன் வைக்கவும் விருப்பமில்லை, தேவையிருப்பதாகவும் நான் எண்ணவில்லை, அதனால் காலணா பிரயோஜனமும் இல்லை ! Over to கி.அ.அ.அனானி.
எ.அ.பாலா
************************************
முன்னதாக ஒரு "பின்" குறிப்பு : பதிவர் சுகுணா திவாகர் தனது வாயால் மட்டும் சிரிப்பதில்லை ( அவரே சொன்னதுதான்) அதனால்தான் அவர் எழுதும் சில பதிவுகள் அவர் எதாலோ சிரிக்கும் போது வெளிப்படும் நறுமண குணநலன்களைக் கொண்டிருக்கிறதோ என்னமோ.
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை" "பாப்பார நாய்" என்று வர்ணித்து தனது தரத்தை மேலும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் கொண்டுள்ளார் சுகுணா திவாகர்.. இப்படியாக அடுத்தவரை ஜாதிய சாயம் பூசி திட்டும் இவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் " பிள்ளைமார் புத்தியை" காட்டிவிட்டாய் என்று யாரோ சொன்னதற்கு குமுறி குமுறி அழுது விட்டு பதிவுலகத்தில் " இன்றே இப்படம் கடைசி" போர்டெல்லாம் மாட்டி ஒப்பாரி ஓலமிட்டு ஓடினார். ( அப்புறம் எதிர்பார்த்த மாதிரியே இவர்களுக்கே உரித்தான கொள்கை தர்மப்படி புறவாசல் வழியாக மீண்டும் பதிவெழுத வந்த "கொள்கைக் குன்று " என்பது தனிக்கதை :) வலுவான எதிர்ப்பு இருக்காது என்பதற்காக வழக்கப்படி பார்ப்பனர்களை மட்டும் ஜாதி சொல்லித் திட்டும் இந்த மாதிரி " போலி ஜாதி எதிர்ப்பிற்கு " பார்ப்பனீயம், வர்ணம், ஜாதி அடுக்கு என்று என்ன 'லாஜிக்' எழவு வேண்டியிருக்கிறது?
இன்னும் (Director) சங்கர் சாகவில்லையே என்று வருத்தமாம்...அது சரி... எல்லோரும் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? எனக்குக் கூடத்தான் "எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்து , அப்பாவி ஏழைகளை ஏமாற்றித் திரியும் போலி கம்யூனிஸ்டுகளின் ஆசன வாயில் சொருக வேண்டும் " என்று ஆசை.நிறைவேறுகிறதா பார்ப்போம்.
எழுத்தாளர் சுஜாதாவின் ஆளுமை மற்றும் தமிழ் எழுத்துலகில் அவரது சாதனைகள் இவைகளைப் பட்டியல் போட்டால் அதில் தேடிப் பிடித்து நொட்டை ,நொள்ளை சொல்லி விவாதிப்பார்களாம்..இப்படி ஒரு பின்னூட்டம் :)ஏற்கனவே சிலர் குறிப்பிட்டுள்ள படி " முன் முடிவுடன்" எழுதுபுவர்களுக்கு பட்டியல் போட்டால் மட்டும் புரிந்து விடவா போகிறது ? முன்னெல்லாம் "ரஷ்யா, சீனா என்று உதாரணம் சொல்லிக் கொண்டு அலைந்தவர்களெல்லாம் அதெல்லாம் காலாவதியாகிப் போன சரக்கானதும் " என்னைத்தவிர எல்லாமே தப்பு " என்ற ஒன் லைனர் சித்தாந்தத்திற்கு மாறி பித்துப் பிடித்து அலையும் அறிவின் நீட்சிதான் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத இப்படிப் பட்ட பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல ?
சுஜாதா ,சுரா இன்னும் பிற எழுத்தாளர்களது மேல் இவர்களுக்கு அப்படி என்ன "காண்டு"? வேறொன்றுமில்லை, இந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் மக்கள் படிக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையை கசக்கிப் பிழிந்து எழுதும் சிவப்பு பிட் நோடிஸை அங்கங்கே தெரு முனையில் நின்று வினியோகம் செய்யும் கட்சித் தோழர்களே கூட படிப்பதில்லை என்ற பொறாமை பொச்சரிப்புதான்.ஒரு வேளை சுஜாதா ,சுரா போன்றவர்களை வைத்து எழுதினால் இந்த நோட்டீஸுகளை மக்கள் ஓரளவேனும் படிக்கக் கூடும் என்பது என் கருத்து.
தான் சொன்னது சரிதான் என்று நிலை நாட்ட பதிவில் மேலும் ராமராஜன் மற்றும் கே எஸ் ரவிகுமார் போன்றோரின் படங்களை வர்க்க ரீதியாக அளவு பார்த்து தரம் பிரித்து " சித்தாந்த செங்கோலை செங்குத்தாக" நிறுத்தியிருக்கும் காமெடியும் இருக்கிறது.படித்து மகிழலாம்.அடடா..இப்படிப் பட்ட ஆதரவு கிடைக்கும் என்று முன்னமேயே தெரிந்திருந்தால் ராமராஜன் தன் கலைச் சேவையை தொடர்ந்திருக்கக் கூடும்.
மற்றும் ஒரு விஷயம்... தனது திருமணம் பற்றி பறை சாற்றி முன்னம் எழுதிய சுய தப்பட்டக் கொள்கை விளக்கப்பதிவு. அப்பொழுதே அது பற்றி எழுத எத்தனித்து பின் எப்படியாகினும் அது அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் மெளனமாக இருந்த, அதே குறைந்த பட்ச நாகரீகத்தை இப்போதும் பின்பற்றி அது பற்றி பேசாமல் விடுகிறேன்.இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ,தனி மனித தாக்குதல்களுக்கும் ,கொள்கைகளைத் தாகுவதற்கும் உள்ள வித்தியாசம் நூலிழைதான்.அதனால் அதை புரிந்து கொண்டு, எழுதும் போதும் பேசும் போதும் கவனமாக கைக் கொள்ள வேண்டும், எழுதுவதும் பேசுவதும் சுஜாதாவை பற்றியதாக இருந்தாலும் சரி,ஜெ மோவாக இருந்தாலும் சரி, சக பதிவராக இருந்தாலும் சரி..இல்லை ராமபிரானாகவோ அல்லது அல்லாவாகவோ இருந்தாலும்.